

அன்புடையீர்,
வணக்கம். கல்வியாண்டு 2019-2020 முதல், நமது பள்ளியில் சுய வழிகாட்டுதல் (Self Guided Learning) முறையில் கற்க உதவுமாறு இணையதளத்தினை மாற்றியமைத்துள்ளோம். இதில் சேர்ந்து படிக்க முன்பதிவு செய்தல் அவசியம். முன்பதிவு செய்த மாணவ/மாணவிகள் மட்டுமே தமிழ்த் திறனாய்வுத் தேர்வில் கலந்து கொள்ள முடியும். அவ்வாறு சேர்ந்த வகுப்பில் 25 பாடங்களையும் படித்து முடித்தவர்களே தேர்வில் கலந்து கொள்ள முடியும்.
நமது கல்வியாண்டு ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் துவங்கும். ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். மாணவ/மாணவிகள் தாங்கள் பங்கேற்கும் வகுப்பில் பதிவு செய்தல் அவசியம். பதிவு/தேர்விற்கான கட்டணம் ஆண்டிற்கு $9.99.
பதிவு செய்த மாணவர்கள் நமது இணைய தளத்தில் அவர்களுக்குக் கொடுத்த கால அட்டவணைப்படி (Class Schedule) பாடங்களைப் படிக்க வேண்டும்.
வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ்!!!
வெல்க தமிழ்!!!
ஆகஸ்ட் மாத இறுதியில் (08-27-2016) நமது தமிழ்ப் பள்ளியின் 2016-2017 கல்வியாண்டு துவங்குகிறது. நமது பள்ளியின் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பள்ளி துவங்குவதற்கான ஆயுத்தங்களைச் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு நமது பள்ளியின் பாடங்களின் எழுத்து மற்றும் சொல் பயிற்சிகள் ஊடாடும் வகையில் (Interactive) வெளியிடப்படும்.
அமெரிக்க நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிகளில் ஊடாடும் மென்பொருள்களின் உபயோகத்தை நன்று அறிவார்கள். அதற்கான உரலி இணைப்பு பாலசந்திரிகையிலும், இணையதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும். எனவே எல்லா மாணவ, மாணவிகளும் இந்த சிறந்த வாய்ப்யை பயன்படுத்திக் கொள்ளவும். அடுத்த ஆண்டு திறனாய்வுத் தேர்வில் கலந்து கொள்வதற்கான பயிற்சிகளும், மாதிரி வினாத்தாள்களும் இதிலிருந்து பெற்றுக் கொள்ளுமாறு வடிவமைத்துள்ளோம்.
நமது www.ilerantamilnow.com இணையதளத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளோம். முதலாவதாக நமது பாடப் புத்தகங்களை நமது மின்னங்காடியில் வாங்கிக் கொள்ளலாம். அனைத்து மாணவ, மாணவிகளும் புத்தங்கங்கள் வாங்குவது அவசியம். பாடப் புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் குழந்தைகளின் படிக்கும் மற்றும் எழுதும் திறனை வளர்க்க உதவும். புத்தகங்கள் விற்பதனால் கிடைக்கும் வருமானம் நமது பள்ளியின் மேம்பாட்டிற்காக செலவு செய்யப்படும்.
பாலசந்திரிகையின் முந்தைய இதழ்களைப் படிக்க உதவுமாறு மின்நூலகம் அமைத்துள்ளோம். நீங்களும் நமது பள்ளியின் குழுமத்தில் ஒரு அங்கத்தினராகலாம். மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், மற்ற தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் அங்கத்தினராகலாம். அங்கத்தினராவதின் மூலம் உங்கள் அன்பையும், ஆதரவையும் தெரிவிக்கிறீர்கள். அங்கத்தினராவதற்கு கட்டணம் ஏதுமில்லை.
நாம் வளர்கிறோம், நமது வளர்ச்சியில் பங்கு கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
தரணியெல்லாம்பரவி வாழும் தமிழ் இன மக்களுக்கு கோப்பலில் இருந்து ஒரு தமிழ் வணக்கம் !!!
நமது தமிழ் கற்பிக்கும் பணியின் அடுத்த கட்டமாக, தமிழை இணையத்தின் வாயிலாக கற்பிக்கும் முறையினை செயலாக்க விரும்புகின்றோம்.
இந்த இணைதளம் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்க் குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு தாய் மொழியான தமிழைப் பேசவும், படிக்கவும், எழுதவும் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
ஒவ்வொரு பெற்றோரும் தனது வழித் தோன்றலுக்கு தர வேண்டிய கல்வி தாய் மொழி கல்வி. அதனைச் செம்மையாகவும் செழிப்பாகவும் செய்திட கரம் கொடுங்கள், தோள் கொடுங்கள், துணை தாருங்கள் என வேண்டி விரும்பி அழைக்கின்றோம்.
வருக !!! வருக !!! உங்கள் வரவு நல்வரவாகுக !!!
உயர்திரு. பேராசிரியர் முனைவர். கு. ஞானசம்பந்தன் அவர்கள் நமது இலவச இணையதளத் தமிழ்ப் பள்ளிக்குக் கொடுத்துள்ள முகவுரையைக் கேட்க இங்கே சொடுக்கவும்.