ஒரு செயலை விளக்குபவை வினைச்சொற்கள் என்று படித்துள்ளோம். ஒரு வாக்கியத்தில் வினைச்சொல் இல்லாவிடில் அது முழுமையடையாது. ஒரு வாக்கியத்தில் வினையை நான்கு விதமாக அமைக்கலாம்.
- தன்வினை
- பிறவினை
- செய்வினை
- செயப்பாட்டு வினை
தன் வினை என்பது ஒரு வாக்கியத்தில் ஒரு செயலை ‘எழுவாய்’ செய்வதாக அமைவது. எடுத்துக்காட்டாக:
- நான் பாடினேன்.
- குமார் ஓடினான்
- இராமன் காட்டுக்குப் போனான்
- சூர்யா பள்ளிக்கூடம் சென்றான்.
- கமலா பல் துலக்கினாள்.
பிறவினை – ஒருவாக்கியத்தில் ஒரு செயலை ‘எழுவாய்’ தானே செய்யாமால் பிறரைச் செய்ய வைப்பது போல் அமைவது.
- தசரதன் இராமனைக் காட்டுக்குப் போகச் செய்தார்.
- ஆசிரியர் குமாரைப் படிக்கச் செய்தார்.
- வீட்டுக்காரார் வேலைக்காரியைப் பெருக்கச் செய்தார்.
தன்வினை வாக்கியங்களில் ‘எழுவாய்’ வினை செய்வதாக அமைந்துள்ளது. பிறவினை வாக்கியங்களில் ‘எழுவாய்’ பிறரை வினை செய்ய தூண்டுவதாகவோ அல்லது செய்விப்பதாகவோ அமந்துள்ளது.
வினை செய்பவரைக் கர்த்தா என்று குறிப்பிடுவது வழக்கம். அதேபோல் ஒரு வினை செய்ய உதவும் பொருளை அல்லது நபரைக் கருவி என்று குறிப்பிடுவது வழக்கம்.
செய்வினை என்பது கர்த்தாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து கர்த்தாவே “எழுவாயாக” வருமானால் அவ்வாக்கியம் செய்வினை (Active voice) என்று அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக,
- கண்ணன் மாம்பழம் சாப்பிட்டான்.
- மாலா புத்தகம் படித்தாள்.
- கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.
இவ்வாக்கியங்களில் கண்ணன் , மாலா, கண்ணதாசன் ஆகியோர் செயலைச் செய்பவர்கள். அவர்களே இவ்வாக்கியங்களில் எழுவாயாக வந்துள்ளார்கள்.
செயப்பாட்டுவினை என்பது ‘செயப்படு பொருளுக்கு (Object)’, முக்கியத்துவம் கொடுத்து அதுவே ‘எழுவாயாக’ மாறி வருமானால் அவ்வாக்கியம் செயப்பாட்டுவினை என்று அழைக்கப்படும்.
- மாம்பழம் கண்ணனால் சாப்பிடப்பட்டது.
- புத்தகம் மாலாவால் படிக்கப்பட்டது.
- பாடல்கள் கண்ணதாசனால் எழுதப்பட்டன.
செயப்பாட்டு வினைச்சொல் மூன்று காலங்களிலும் வரும். எடுத்துக்காட்டாக,
