22. பெயரும், வினையும், கூட்டு வார்த்தைகள்

தமிழில் ஒரு சொல், பெயர்ச் சொல்லாகவும் அதே சொல் வேறு ஒர் இடத்தில் வினைச் சொல்லாகவும் வரும். இப்போது அவ்வாறு வரும் சில சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.

அடுத்ததாக, தமிழில் கூட்டு வார்த்தைகளைப் பற்றிப் படிப்போம். தமிழில் பல இடங்களில் அடுத்து அடுத்து வரும் இரண்டு வார்த்தைகள் இணைந்து ஒரு வார்த்தையாக வரும். இரண்டு சொற்கள் சேர்ந்து கூட்டுச் சொல்லாக வருவதை ‘புணர்ச்சி’ என்பர். அவ்வாறு சேரும் போது மாறுதல் இல்லாமல் சேர்ந்தால் அது ‘இயல்புப் புணர்ச்சி’. இப்போது அதற்கான சில எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போம்.

அவ்வாறு சேரும் போது மாறுதல் அடைந்து சேர்ந்தால் அது ‘விகாரப் புணர்ச்சி’. விகாரப் புணர்ச்சியில் புதிதாக ஒரு எழுத்துத் தோன்றலாம்.

விகாரப் புணர்ச்சியில் முதற்சொல்லின் கடைசி எழுத்து திரியலாம். (மாறலாம்).

விகாரப் புணர்ச்சியில் முதற்சொல்லின் கடைசி எழுத்து மறையலாம்.

விகாரப் புணர்ச்சியில் புதிதாக ஒரு சொல் தோன்றலாம் அல்லது பல மாற்றங்கள் பல சேர்ந்து வரலாம்.