12. வினைச்சொல்-தொகுப்பு

ஒரு சொற்றொடரில் வினையை அல்லது செயலைக் குறிக்கும் சொற்கள் வினைச் சொற்களாகும். ஒரு வினை அல்லது செயல் கடந்தகாலத்தில், நிகழ்காலத்தில் அல்லது எதிர்காலத்தில் நடை பெறலாம். இப்போது ஒரு வினைச் சொல் எவ்வாறு காலம் காட்டுகிறது என்பதைப் படித்தோம்.

வினைச்சொற்கள் எவ்வாறு திணையைக் காட்டுகின்றன என்பதைப் பற்றி மேலும் விரிவாகப் படித்தோம்.

தமிழில் திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தரும். தமிழில் சொற்களை உயர்திணைச் சொல் என்றும், அஃறிணைச் சொல் என்றும் இருவகைகளாகப் பிரிக்கலாம்.

ஆறு அறிவு உள்ள மக்கள் உயர்திணை. அறிவில் குறைந்த ஏனைய உயிரினங்களும், உயிர் இல்லாதனவுமாகிய பொருள்களும், அஃறிணை. அஃறிணை என்பது அல்+திணை, அதாவது உயர்வு அல்லாத திணை என்னும் பொருளைத் தரும்.

வினைச்சொற்கள் எவ்வாறு ‘பால்’, ‘எண்’ காட்டுகின்றன என்பதைப் பற்றி விரிவாகப் படித்தோம்.

தமிழில் ‘பால்’ என்பது ‘Gender’ என்ற பொருளைத் தரும். உயர்திணைக்குரிய பால்: ஆண்பால், பெண்பால், பலர்பால்.அஃறிணைக்குரிய பால்: ஒன்றன் பால், பலவின் பால்.

வினைச்சொல்  ‘எண்களில்’ ஒருமை, பன்மையைக் எவ்வாறு காட்டுகிறது என்று படித்தோம்.

நாம் பேசும்போது பேசுகின்ற நாமும், கேட்கின்றவர்களும், பேசப்படும் பொருளும்  மூன்று நிலைகளில் உள்ளன. இதையே தமிழ் இலக்கணத்தில் இடம் என்று குறிப்பிடப்படுகிறது.

இடம் மூன்று வகைப்படும். எனவே இதை மூவிடம் என்றும் கூறுவார்கள்.  தன்மை – 1st person, முன்னிலை – 2nd person, படர்க்கை – 3rd person.இந்த மூன்று இடங்களையும் வினைச்சொல் எவ்வாறு காட்டுகிறது என்று படித்தோம்.

கீழே ‘வா’ என்னும் வினைச்சொல் எப்படி யெல்லாம் மாறி வருகிறது என்று தொகுத்துள்ளோம்.