10. வினைச்சொல்-இடம்

நாம் பேசும்போது பேசுகின்ற நாமும், கேட்கின்றவர்களும், பேசப்படும் பொருளும்  மூன்று நிலைகளில் உள்ளன. இதையே தமிழ் இலக்கணத்தில் இடம் என்று குறிப்பிடப்படுகிறது. இடம் மூன்று வகைப்படும். எனவே இதை மூவிடம் என்றும் கூறுவார்கள்.

1) தன்மை – 1st person
2) முன்னிலை – 2nd person
3) படர்க்கை – 3rd person

தன்மை: பேசுபவர் தன்னைக் குறிப்பது தன்மைஎனப்படும். இது இரண்டு வகைப்படும்.

  1. தன்மை ஒருமை – 1st person singular
  2. தன்மைப் பன்மை – 1st person plural

தன்மை இடத்தில் ஒருவரைக் குறிப்பது தன்மை ஒருமை எனப்படும். வினைச்சொல்லில் ‘ஏன்’ விகுதி வரும். உதாரணமாக: நான் பேசினேன்
யான் பேசினேன்

உதாரணமாக:  நாம் படித்தோம், யாம் படித்தோம்

     

முன்னிலை: முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை எனப்படும். இது இரண்டு வகைப்படும்.

1) முன்னிலை ஒருமை –  2nd person singular
2) முன்னிலைப் பன்மை – 2nd person plural

முன்னிலை இடத்தில் ஒருவரைக் குறிப்பது முன்னிலை ஒருமை எனப்படும். வினைச்சொல்லில் ‘ஆய்’ விகுதி வரும்.

உதாரணமாக: நீ வந்தாய்

முன்னிலை இடத்தில் பலரைக் குறிப்பது முன்னிலைப் பன்மை எனப்படும். வினைச்சொல்லில் ‘ஈர் / ஈர்கள்’ விகுதி வரும்.

உதாரணமாக: நீர் வந்தீர், நீங்கள் வந்தீர்கள்

படர்க்கை: தன்மையும் முன்னிலையும் அல்லாத பிறர் அல்லது பிற பொருளைக் குறிப்பது படர்க்கை எனப்படும். இது இரு வகைப்படும்.

1) படர்க்கை ஒருமை – 3rd person Singular
2) படர்க்கைப் பன்மை – 3rd person plural

படர்க்கையில் ஒருவர் அல்லது ஒரு பொருளைக் குறிப்பது படர்க்கை ஒருமை எனப்படும். வினைச்சொல்லில் ‘ஆன்/ஆள்/அது’ விகுதி வரும்.

உதாரணமாக:  அவன் வந்தான், அவள் வந்தாள், அது வந்தது

படர்க்கையில் பலர் அல்லது பல பொருளைக் குறிப்பது படர்க்கைப் பன்மை எனப்படும். வினைச்சொல்லில் ‘ஆர்/ஆர்கள்/அன’ விகுதி வரும்.

உதாரணமாக:       அவர் வந்தார், அவை வந்தன.

தன்மை, முன்னிலை ஆகியவற்றைக் குறிக்கும் இடப்பெயர்களில் ஆண்பால், பெண்பால் என்னும் பிரிவுகள் தெரிவதில்லை. ஆனால் படர்க்கைச் சொல்லில் மட்டும் ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால் என்னும் பிரிவுகள் தெரியும்.