16. ஒருமை, பன்மை

ஒரு தமிழ் வாக்கியத்தில் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை. பல பொருட்களைக் குறிப்பது பன்மை. ஒருமை அல்லது பன்மை இரண்டையும் சேர்த்து ‘எண்’ என்று அழைக்கலாம்.

எடுத்துக்காட்டு

  1. கிளி பறந்தது – இதில் ‘கிளி’ என்பது ஒருமை.
  2. கிளிகள் பறந்தன. – இதில் ‘கிளிகள்’ என்பது பன்மை.

ஒரு வாக்கியத்தில் பெயர்சொல், பிரதி பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல் பேசப்படும் பொருள் ஒருமையா அல்லது பன்மையா என்று காட்டும். 

இதில் ‘கிளி’ என்ற ஒருமைப் பெயர்ச்சொல்லுடன் ‘கள்’ விகுதி சேர்ந்து ‘கிளிகள்’ என்று வரும் போது அது பன்மைப் பெயர்ச்சொல்லாகிறது.

இப்போது சில ஒருமைப் பெயர்ச்சொற்களையும் அதற்கான பன்மைச் சொற்களையும் படிக்கலாம்.

இதில் ஒருமைப் பெயர்ச் சொல்லுடன் ‘கள்’ சேர்ந்து பன்மையாக வந்துள்ளது. இப்போது மேலும் சில சொற்களைப் படிக்கலாம்.

இதில் ஒருமைப் பெயர்ச் சொல்லுடன் ‘ம்’ மறைந்து ‘ங்கள்’ சேர்ந்து பன்மையாக வந்துள்ளது. இப்போது மேலும் சில சொற்களைப் படிக்கலாம்

சிலவற்றில் ஒருமைப் பெயர்ச் சொல்லுடன் ‘ள்’ மறைந்து ‘ட்கள்’ சேர்ந்து பன்மையாக வந்துள்ளது. சிலவற்றில் ஒருமைப் பெயர்ச் சொல்லுடன் ‘ல்’ மறைந்து ‘ற்கள்’ சேர்ந்து பன்மையாக வந்துள்ளது. சிலவற்றில் ஒருமைப் பெயர்ச் சொல்லுடன் ‘க்கள்’ சேர்ந்து பன்மையாக வந்துள்ளது.

இப்போது பிரதிப் பெயர்ச்சொற்களில் ஒருமை பன்மை பற்றிப் படிக்கலாம். பிரதிப் பெயர்ச்சொற்களில் ஒருவரை மரியாதையுடன் விளிக்கும் போது பன்மையாக்கி அழைப்பது வழக்கம்.

மேலும் சில விதமாக ஒருமை பன்மை காட்டப்படுகிறது.

எடுத்துக்காட்டாக:

“அது மாடு” என்று குறிப்பிடும் போது மாடு ஒருமையைக் குறிக்கிறது. “அவை மாடு” என்று குறிப்பிடும் போது அது பன்மையை குறிக்கிறது. இங்கு ‘சேரும் பிரதிப் பெயர்ச் சொல்லால்’ பன்மையாகியது.

“மாடு வந்தது” என்று குறிப்பிடும் போது மாடு ஒருமையைக் குறிக்கிறது. “மாடு வந்தன” என்று குறிப்பிடும் போது அது பன்மையை குறிக்கிறது. இங்கு “சேரும் வினைச் சொல்லால்” பன்மையாகியது.

“ஒரு பழம் என்ன விலை?” என்று குறிப்பிடும் போது “ஒரு” ஒருமையைக் குறிக்கிறது. “நூறு பழம் என்ன விலை?” என்று குறிப்பிடும் போது “நூறு” பன்மையை குறிக்கிறது. இங்கு “சேரும் பிரதிப் பெயர்ச்சொல்லால்” பன்மையாகியது.