03. குட்டி போட்ட பானை

முல்லா ஒருமுறை பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு பானை இரவல் வாங்கினாராம். பல நாட்கள் வரை முல்லா பானையைத் திருப்பித் தராததால், பக்கத்து வீட்டுக்காரர் வந்து பானையைத் திருப்பி கேட்டார்.

அதற்கு முல்லா “அடடே…, உங்களிடம் வாங்கிய பானையைத் திருப்பிக் கொடுக்காமல் இருந்ததிலும் ஒரு லாபம் இருக்கின்றது.

அந்தப் பானை ஒரு குட்டி போட்டு இருக்கின்றது”, என்று சொல்லி அதனுடன் ஒரு சிறிய பானையும் கொடுத்தார். பக்கத்து வீட்டுக்காரர் மகிழ்ச்சியில் இரண்டு பானையும் வாங்கிச் சென்றார்.


அதேபோல் சில நாட்களுக்குப் பிறகு முல்லா அந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் “முன்பு கொடுத்ததை விட பெரிய பானை இன்று இரவல் கொடுக்க முடியுமா?” என்று கேட்டார். பக்கத்துவீட்டுகாரர் ஒன்றுக்கு இரண்டாகக் கிடைக்கும் என்று மகிழ்ச்சியில் பெரிய பானை ஒன்றைக் கொடுத்தார்.
பல நாட்கள் ஆகியும் முல்லா பானையைத் திருப்பித் தரவில்லை. பின் தயங்கித் தயங்கி பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து பானையைத் திருப்பிக் கேட்டார்.

 “அத ஏன் கேட்கறீங்க அந்தப் பானை நேற்றுதான் செத்துப் போச்சு” என்றார் முல்லா.

கோபம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்  “என்னது என்னை என்ன இழிச்சாவாயன் என்று நினைத்தாயா? பானை எப்படிச் செத்து போகும்” என்று கோபமுற்றார்.

அதற்கு முல்லா “பானை குட்டி போட்டதை நம்பும் பொழுது ஏன் செத்துப் போனதை நம்பமுடியாது?” என்று கேட்டதும் பக்கத்து வீட்டுக்காரர் தலைகுனிந்து சென்றுவிட்டார்.

திருக்குறள்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.                               (
குறள்:129)

ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.

The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.