15. பேராசை பெருநஷ்டம்

கந்தன் என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் குடிசையில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதாலும் வேலைக்கும் செல்ல முடியாததாலும் அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.

இந்நிலையில் ஒரு நாள் அவன் ஆண்டவனை நோக்கி “இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய். இது இப்படியே நீடித்தால், வறுமை தாங்காது, நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை” என வேண்டினான். உடன் இறைவன் நேரில் தோன்றி, அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து ஒவ்வொரு நாளும் ஒரு பொன் முட்டை இடும் என்றும், அதை அன்றன்று விற்று உன் வாழ்நாளைக் கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.

வாத்து தினம் ஒரு முட்டையிட அவர்கள் வாழ்வு தினமும் இனிதாகக் கழிந்தது.

ஒரு நாள் கந்தனின் மனைவி அவனிடம் “தினம் தினம் இது பொன் முட்டையிட்டு அதை விற்று நாம் பிழைக்கிறோம். அதற்கு பதில் இதை அறுத்து அதன் வயிற்றில் உள்ள மொத்த பொன் முட்டைகளையும் எடுத்து விற்று நாம் பெரிய பணக்காரராக ஆகிவிடலாமே” என்றாள்.

கந்தனும் அவளது பேச்சைக் கேட்டு, அந்த வாத்தை பிடித்து அதன் வயிற்றைக் கிழித்தான். ஆனால் அதன் வயிற்றில் ஏதும் இல்லை. மற்ற வாத்துக்களைப் போலவே இருந்தது.

முட்டாள் கந்தனும்,மனைவியும் தினமும் அடையும் லாபத்தை விட்டு ஒரே நாளில் பணக்காரராகும் பேராசையுடன் செயல்பட்டதால் இருந்ததையும் இழந்தனர்.

கீழே கொடுத்துள்ள உயிர்மெய்(வ…வௌ) எழுத்துக்களை மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.

கீழே கொடுத்துள்ள வார்த்தைகளை மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.