11. நாமே முடிவு செய்ய வேண்டும்

ராமன் தனது மனைவியுடனும், அவன் வளர்க்கும் குதிரையுடனும் பக்கத்து ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.

வழியில் அவனது நண்பன் முருகன், நீயாவது, மனைவியாவது குதிரையில் அமர்ந்து செல்லலாமே என்றான். உடனே ராமன் தன் மனைவியை குதிரையின் மீதேற்றி அழைத்து சென்றான்.

அப்போது ராமனின் மற்றொரு நண்பன் கணேசன் வந்தான். ராமா, உன் மனைவியை விட நீ வயதானவன். ஆகவே நீ குதிரையின் மீதேறிச் செல்லலாமே என்றான். உடன் மனைவியை குதிரையிலிருந்து இறக்கிவிட்டு விட்டு ராமன் குதிரை மீதேறி அமர்ந்தான்.

சிறிது தூரம் சென்றதும், கந்தன் வந்தான். அவன் ராமனைப் பார்த்து “குதிரை இரண்டு பேரையுமே சுமக்குமே, இருவரும் குதிரையில் ஏறிச் செல்லலாமே” என்று சொல்ல ராமன் தன் மனைவியையும் குதிரையில் ஏற்றிக் கொண்டு சென்றான்.

அப்போது அவன் மற்றொரு நண்பன் சரவணன் வந்தான்.’ராமா, உனக்கு மூளை இருக்கா? குதிரை வாயில்லா மிருகம். அதில் இருவர் ஏறி அதன் சுமையை ஏற்றலாமோ? என்றான்.

எப்படிச் செய்தாலும் யாரேனும் ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆகவே நாம் அவர்கள் சொல்லுவதற்கெல்லாம் மதிப்பளித்தால் முட்டாள் பட்டம் தான் கிடைக்கும்.

ஆகவே மற்றவர்கள் சொல்வதைக்கேட்டு நம் மூளையை உபயோகித்து நமக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யவேண்டும் என ராமன் உணர்ந்தான்.

படித்துப் பழகுக:

ம…மெள வரிசையில் வார்த்தைகள்: