கீழே கொடுத்துள்ள பாடலை மனப்பாடம் செய்யவும்.
பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
பாரத நாடு
ஞானத்திலே பர மோனத்திலே-உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
தீரத்திலே படை வீரத்திலே-நெஞ்சில்
ஈரத்திலே உப காரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரங் கண்டு
தருவதிலே உயர் நாடு- இந்தப் (பாருக்குள்ளே)
மகாகவி. சுப்பிரமணிய பாரதியார்.





