08. காக்கைச் சிறகினிலே

காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா – நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

– மகாகவி. சுப்பிரமணிய பாரதியார்.

கீழே கொடுத்துள்ள உயிர்மெய் (த…தௌ) எழுத்துக்களை மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.

எழுதிப் பழகுக.