05. உனக்கு தெரிந்தைச் செய்

ஒரு அழகிய கிராமம். அந்தக் கிராமத்திற்கு வெளியே பெரிய ஏரி ஒன்று இருந்தது. ஏரியின் கரைகளில் ஒரு மீனவன் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரண்டு குழந்தைகள். அவர்கள் பெயர் செல்வி, செல்வம். செல்விக்கு பத்து வயது. செல்வத்துக்கு ஐந்து வயது.

அங்கிருக்கும் எல்லாக் குழந்தைகளை விடச் செல்வத்திற்கு சேட்டை அதிகமாக இருந்தது. ஒருநாள் மீனவன் அந்த ஏரிக்கு வந்து மீன் பிடிக்க வலையை வீசினான். நிறைய மீன்கள் வலையில் சிக்கின. அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு, வலை ஈரமாய் இருந்ததால், கரையில் அதைக் காயப் போட்டு விட்டுச் சென்றான்.

அப்போது அங்கே செல்வம் ஓடிவந்து “அப்பா நில்லுங்கள் நில்லுங்கள் நான் வலையை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்றான். அதற்கு மீனவன் “செல்வம், அது வேண்டாம். நீ சின்னவன் உனக்கு அதைத் தூக்க முடியாது. அது நிறைய கனமாக இருக்கும்.” என்று கூறினான்.

“இல்லை அப்பா நான் கொண்டே வருவேன் கொண்டே வருவேன்” என்று செல்வம் அடம் பிடித்தான். ஆனால், செல்வம் அவன் அப்பாவின் பேச்சைக் கேட்கவில்லை.  செல்வம் அந்த வலையத் தூக்கப் பார்த்தான். அப்போது அந்த வலையில் அவன் கைகள் எல்லாம் சிக்கிக் கொண்டன. பயத்தால் அலற ஆரம்பித்தான். “அப்பா, அப்பா என்னைக் காப்பாற்றுங்கள். என் கைகள் எல்லாம் சிக்கிக் கொண்டன” என்று அலற ஆரம்பித்தான். 

அப்போது மீனவன் திரும்பிச் செல்வத்தைப் பார்த்து கிட்டே வந்தான். மீனவன் செல்வத்தின் கைளை வலையிலிருந்து விடுவித்தான். பிறகு மீனவன் செல்வத்தைப் பார்த்து “செல்வம். தெரியாத காரியங்களில் ஈடுபட்டால் இப்படித்தான் அவதிப்பட நேரிடும். எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும், அதைப் பற்றி தெரிந்துக் கொண்டு ஈடுபட வேண்டும். அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும்” என்று அறிவுரைச் சொன்னான்.

படித்துப் பழகவும்:

எழுதிப் பழகவும்: