01. அம்மா இங்கே வா வா

பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும்.
அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லாள்
ஊரில் யாவர் உள்ளார்
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை 
ஐயம் இன்றிச் சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம். 

அ, ஆ – எழுதிப் பழகவும்.