ஒரு காட்டில் ஒரு ஓநாய் இருந்தது. அது மிகவும் கெட்ட குணம் கொண்டது. தினமும் பலம் குறைந்த ஏதேனும் விலங்குகளையே, பறவைகளையோ கொன்று தன் பசியை தீர்த்துக்கொள்ளும்.
ஒரு நாள் அது இறந்த ஒரு மிருகத்தின் உடலை தின்றபோது அறியாமல் ஒரு எலும்புத் துண்டையும் சாப்பிட்டது. அந்த எலும்புத்துண்டு அதனுடைய தொண்டையில் சிக்கிக்கொண்டது.

அதனால் …அவதிப்பட்ட ஓநாயால் எந்த உணவையும் சாப்பிட முடியவில்லை..
ஒரு நாரையை அது அணுகி, அதன் அலகால் எலும்புத்துண்டை அகற்றுமாறும் அப்படி அகற்றினால் அந்த நாரைக்கு பரிசு தருவதாகவும் கூறியது.
சரியென்று நாரையும் தன் நீளமான அலகை ஓநாயின் தொண்டைக்குள் விட்டு அங்கே சிக்கிக்கொண்டிருந்த எலும்பை வெளியே எடுத்துவிட்டது.
பின் நாரை ஓநாயிடம் பரிசு கொடுக்குமாறு கேட்டது.
உடனே, ஓநாய் “உனக்குத்தான் ஏற்கனவே வெகுமதி கொடுத்துவிட்டேன்,என்னைப்போன்ற ஓநாயின் வாயில் உன் தலையை விட்டுவிட்டு அதை பத்திரமாக வெளியே எடுக்க அனுமதித்தேனே, அதுவே உனக்கு சிறந்த பரிசு தான்” என்று கூறிவிட்டது.
நாரை ஏமந்தது. கொடியவர்களுக்கு உதவி செய்தால் பின் அவற்றிடமிருந்து உயிர் தப்புவது பெரிய காரியமாகிவிடும். ஆகவே தீயவரைக் கண்டால் ஒதுங்குவதே சிறந்தது.

